/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம் கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்
கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்
கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்
கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்

விபத்துகள் தாராளம்
துரை.தில்லான்,ஓய்வு பெற்ற ஆசிரியர், பார்திநகர் : இப்பகுதியில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பின்றி சேதம் அடைந்து வரும் சூழலில் விபத்துகளை ஏற்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. வடிகால் பராமரிப்பின்றி அசுத்த நீர் தேங்குவதால் கொசுத்தொல்லை தாராளமாகி விட்டது. காலியிடங்களில் முள், புதர் செடிகள் மண்டி விஷப் பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளன. பலமுறை பேரூராட்சி நிர்வாகம், அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பராமரிப்பு இல்லை
வீரமணி ,ஓய்வு வங்கி அதிகாரி, பாரதிநகர் : சாக்கடையில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனை சீரமைப்பதில் தொய்வு நிலவும் சூழலில் துாய்மை பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் பணிக்காக இங்கு வருவதில்லை. கண்காணிக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாக அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தரைப்பாலம் அருகே ரோடு இணைவு பகுதியில் அசுத்த நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறி உள்ளது. விஷப் பூச்சிகளின் நடமாட்டத்தால் தெருக்களில் நடமாடுவோர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
தொற்று பாதிப்பால் அவதி
சண்முகம் ,ஜவுளி வியாபாரி, பார்தி நகர் : சாக்கடை பராமரிப்பு கண்டு கொள்ளப்படவில்லை. துப்புரவு பணிகளை கண்காணிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். கால்வாயில் கழிவுநீர் கடந்து செல்ல ஏதுவாக இல்லை. கழிவுகள் குவிந்து மண் மேவிய நிலையில் அசுத்த நீர் தேங்குகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் தேங்குகிறது. மழைக்காலத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றத்துடன் சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. அசுத்த நீர் தேங்குவதால், கொசு, ஈ, வண்டுகள் உள்ளிட்ட பூச்சித்தொல்லை அதிகம் உள்ளது. பலர் டெங்கு, மலேரியா போன்ற தொற்று பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.