Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாராஹி அம்மன் கோயில்களில் வளர்பிறை பஞ்சமி

வாராஹி அம்மன் கோயில்களில் வளர்பிறை பஞ்சமி

வாராஹி அம்மன் கோயில்களில் வளர்பிறை பஞ்சமி

வாராஹி அம்மன் கோயில்களில் வளர்பிறை பஞ்சமி

ADDED : ஜூன் 11, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
சாணார்பட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாராஹி அம்மன் கோயில்களில் வளர்பிறை பஞ்சமி வழிபாடு நடந்தது. இதில் ஏராமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி யாக பூஜை நடந்தது.

வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வளர்பிறை பஞ்சமி யாக பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராஹி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தினார்.

யாக பூஜையில் வரசித்தி வாராஹி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார்.

திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

வாராஹி அம்மன் பிரதிஷ்டை


நத்தம் : கோவில்பட்டி பாமா ருக்மணி வேணுராஜகோபால சுவாமி கோயிலில் வாராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலைகள் அமைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கன்யா பூஜை, மஹாபூர்ணாகுதி பூஜைகள் நடந்தது.

நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. கோயிலின் உள் பிரகாரத்தில் மஹாவாராஹி அம்மன் பிரதிஷ்டை செய்ய அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us