/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ துார்வாரப்படாத ஓடை;முச்சந்தியில் குவியும் குப்பை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டு மக்கள் துார்வாரப்படாத ஓடை;முச்சந்தியில் குவியும் குப்பை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டு மக்கள்
துார்வாரப்படாத ஓடை;முச்சந்தியில் குவியும் குப்பை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டு மக்கள்
துார்வாரப்படாத ஓடை;முச்சந்தியில் குவியும் குப்பை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டு மக்கள்
துார்வாரப்படாத ஓடை;முச்சந்தியில் குவியும் குப்பை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டு மக்கள்

ஓடையை துார்வாருங்க
டி. குமார் தாஸ், பா.ஜ., நகர பொதுச்செயலாளர் ஒட்டன்சத்திரம்: விரிவாக்க பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இங்குள்ள ஓடையை துாவார வேண்டும்.தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதேபோல் மார்க்கெட் பைபாஸ் ரோட்டிலும் ஆக்கிரமிப்பு காரணமாக நெரிசல் குறைந்த பாடில்லை . பை பாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். வார்டின் பல பகுதிகளில் தேவையான இடங்களில் இன்னும் அதிக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். மழைகாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் அமைக்க வேண்டும்.
குடிநீர் பிரச்னை இல்லை
எஸ்.கோபி, திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் பொருளாளர்: வார்டுக்குள் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை. பல இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் வீடு தோறும் குப்பை வாங்கி செல்கின்றனர். சின்னக்குளம் மறுகால் செல்லும் வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
அழகேஸ்வரி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வார்டில் தனியாக ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. புதிதாக உருவான நகர்களில் தெரு விளக்குகள், சாக்கடை வசதி செய்து தரப்படும். வ.உ.சி நகர் பகுதியில் புதிதாக சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.