ADDED : ஜூலை 08, 2024 12:15 AM

வேடசந்துார்: சேலத்திலிருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றிய லாரி ஒன்று மதுரை கப்பலுார் நோக்கி சென்றது.
இந்த லாரியை ராம் நாட்டை சேர்ந்த திலீப் என்பவர் ஓட்டினார். நேற்று காலை 7:00 மணிக்கு வேடசந்துார் தாடிக்கொம்பு பாலம் அருகே லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. லாரி டிரைவர் காயமானார். வேடசந்துார் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டு, ரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.