/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள் 'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூலை 28, 2024 06:36 AM

கொடைக்கானல் : - கொடைக்கானலில் சாரல் மழையுடன் நிலவிய சீதோஷ்ண நிலையை ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
சில தினங்களாக சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்ய குளு குளு நகரான கொடைக்கானல் குளிர்ந்தது.
பயணிகள் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை ,சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.தரையிரங்கிய மேகக் கூட்டத்தை ரசித்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.