/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : ஜூலை 29, 2024 06:32 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, செயல் அலுவலர் முருகன் செய்தனர். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது.
தேங்காய் வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.
ரெட்டியார்சத்திரம் : கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
செம்பட்டி : கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.
பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதைப்போலவே வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைநடந்தது.