Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு

பழநியில் காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு

பழநியில் காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு

பழநியில் காற்றால் ரோப் கார் சேவை பாதிப்பு

ADDED : ஜூன் 02, 2024 04:22 AM


Google News
பழநி: பழநி முருகன கோயில் செல்ல பயன்படும் ரோப்கார் சேவை காற்றின் வேகம் அதிகரித்ததால் ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

பழநி முருகன் கோயில் செல்ல வின்ச், ரோப் கார் வசதிகள் உள்ளன.

ரோப்காரில் பக்தர்கள் 3 நிமிடத்தில் கோயில் செல்ல முடியும். மலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் இயங்காத வகையில் பாதுகாப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மதிய இடைவேளைக்குப் பிறகு காற்றின் வேகம் அதிகரித்ததால் ரோப்கார் சேவையில் ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பு கருவி ரோப் கார் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் படிப்பாதை வின்ச் சேவையை பயன்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us