ADDED : ஜூன் 06, 2024 04:09 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் வேடசந்துார் பிலாத்து முத்தாலம்மன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதே பகுதியை சேர்ந்த வெற்றி முருகன் கோயில் அருகே மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். வெற்றிமுருகனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.