Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை

வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை

வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை

வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை

ADDED : ஜூன் 07, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை பூஜையையொட்டி மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடந்த யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மழை வேண்டி நடந்த இந்த பூஜையில் வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

வேள்வி பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரான பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வாராஹி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us