ADDED : ஜூலை 13, 2024 07:21 AM

சின்னாளபட்டி, : சின்னாளபட்டி பேரூராட்சி வரி வசூலராக இருப்பவர் கருப்பையா 52. இதே பகுதியில் சமீபத்தில் நடந்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் விழாவில் இளைஞர்கள் கத்தி போட்டு வழிபாடு நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக அம்மன் பெயரை தவறாக குறிப்பிட்டு வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
தேவாங்கர் சமுதாய நிர்வாகி ராஜேந்திரன், சின்னாளபட்டி போலீசில் ஆதாரங்களுடன் புகார் செய்தார்.
விசாரித்த போலீசார் வரி வசூலர் கருப்பையாவை கைது செய்தனர்.