Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'லொள்ளு' தொல்லை தாங்கல: கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்

'லொள்ளு' தொல்லை தாங்கல: கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்

'லொள்ளு' தொல்லை தாங்கல: கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்

'லொள்ளு' தொல்லை தாங்கல: கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்

ADDED : ஜூலை 25, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த மக்களும் குரல் எழுப்பியும் எதையும் கண்டுக்காது உள்ளாட்சி துறை வேடிக்கை பார்க்கிறது .

மாவட்டத்தில் நகர், புறநகர், கிராமப் பகுதி ரோடு தெருக்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

இதை கண்டாலே மக்கள் பதறும் நிலை தொடர்கிறது . ரோடுகளில் படுத்திருக்கும் நாய்கள் டூவீல வாகன ஓட்டிகளை கண்டாலே விரட்டி விரட்டி கடிக்க பாய்கிறது .

தனியாக நடந்து செல்வோரை கண்டாலே துரத்துவது,கடித்து குதறுவது ஏன நாய்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தினம் தினம் ஒன்று முதல் ஐந்து பேர் வரை அந்தப்பகுதி மருத்துவமனைக்கு நாய்கடியால் சிகிச்சை பெற வருகின்றனர்.

நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சிகள் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் மக்களின் அலறலை கண்டுக்காமல் உள்ளது.

இதுஒரு புறம் இருக்க சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் அதிகம் நடக்கிறது. பஸ் , ரயில் ஏறுவதற்காக வேகமாக வரும் பயணிகளையும் நாய்கள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

கிராமப்புறங்களில் கோழி, ஆடு, மாடுகளையும் நாய்கள் கடித்து கொன்று விடுகின்றன.

குறிப்பாக சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us