/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் கார்கில் வெற்றி புகைப்பட கண்காட்சி பழநியில் கார்கில் வெற்றி புகைப்பட கண்காட்சி
பழநியில் கார்கில் வெற்றி புகைப்பட கண்காட்சி
பழநியில் கார்கில் வெற்றி புகைப்பட கண்காட்சி
பழநியில் கார்கில் வெற்றி புகைப்பட கண்காட்சி
ADDED : ஜூலை 31, 2024 05:14 AM

பழநி : மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பாக சார்பில் கார்கில் வெற்றியை கொண்டாடும் வகையில் பழநியில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பாக சார்பில் கார்கில் வெற்றியை கொண்டாடும் வகையில் மண்டல இயக்குனர் லீலா மீனாட்சி தலைமையில் பழநியில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் சார்பில் விளக்கப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு,எழுத்து,ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நகர் நல அலுவலர் மனோஜ் குமார், வேளாண் உதவி இயக்குனர் கவுசிகா தேவி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹாலிதா ஜைனா பாத்திமா கலந்து கொண்டனர். கண்காட்சி இன்றும் நடக்கிறது.