Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நடுரோட்டில் உள்ள பெயர் பலகையால் இடையூறு

நடுரோட்டில் உள்ள பெயர் பலகையால் இடையூறு

நடுரோட்டில் உள்ள பெயர் பலகையால் இடையூறு

நடுரோட்டில் உள்ள பெயர் பலகையால் இடையூறு

ADDED : ஜூலை 31, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
வாகனங்களால் இடையூறு

தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷன் நுழைவு வாயில் முன் வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் ஆண்டு கணக்கில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இவ்வாகனங்களை மாற்றம் செய்ய வேண்டும். எஸ். முருகன், தாண்டிக்குடி.

.........--------

ரோட்டோர கிணறால் ஆபத்து

குஜிலியம்பாறை ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி கொண்டமநாயக்கன்பட்டி அரசு பள்ளி அருகே உள்ள வளைவில் ரோட்டோரம் ஆபத்தான கிணறு உள்ளது .இதனால் விபத்து ஏற்படும் அபாயும் உள்ளது .தடுப்பு சுவரை உயர்த்தி கட்ட வேண்டும்.பழனிச்சாமி குஜிலியம்பாறை.

.................-------மின்கம்பத்தில் செடிகள்

கொடைரோடு பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிப்பறை செல்லும் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து மின் கசிவு ஏற்படுகிறது .இதனால் அருகில் செல்ல அச்சப்படுகின்றனர் .விபத்து ஏற்படும் முன் புதர்மண்டி உள்ள செடிகளை அகற்ற வேண்டும் க.ரதிஷ்பாண்டியன் , பொம்மணம்பட்டி.

.........------

உடைந்த படிக்கட்டுகள்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுரை, தேனி, பஸ் நிறுத்தம் எதிரே உள்ள பாதையில் படி சேதம் அடைத்து சிமென்ட் பூச்சு உடைந்து கம்பி வெளியே தெரிகிறது. பயணிகள் சிரமப்படுவதால் படிக்கட்டைகளை சரி செய்ய வேண்டும்.ராஜேஷ் குமார் திண்டுக்கல்.

............------நடுரோட்டில் பெயர் பலகை

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு எம்.எம்.கல்லுாரி அருகே ஆர். எம்.காலனி ரோட்டில் பெயர் பலகை நடுரோட்டில் வைத்துள்ளதால் இடையூறு ஏற்படுகிறது .போக்குவரத்துக்கு சிரமம் உள்ளதால் பலகையை ஓரமாக வைக்க வேண்டும்.சின்னத்தம்பி திண்டுக்கல்.

..........------சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு

திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோடு சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.செல்வம்,திண்டுக்கல்.

.......-------சர்வீஸ் ரோட்டில் குப்பை

திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குப்பை குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியில் இருந்து குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. கவுசல்யா, திண்டுக்கல்.

.............





      Our Apps Available On




      Dinamalar

      Follow us