Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

ADDED : ஜூலை 10, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளின் ரோட்டோரங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்புலத்தில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் ஜோராக நடந்து வருகின்றன.

ரோடுகள் மட்டும் ஆக்கிரமிக்கப்படுவதில்லை குளம், கண்மாய் தொடங்கி அனைத்துமே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. புதிய கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் என கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.

இதில் கோயில் நிலங்களும் விதிவிலக்கல்ல. ஏதேனும் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சென்றால் அரசியல் கட்சியினரின் தலையீடுகள் அதிகளவில் உள்ளன. சமீப காலமாக இது அதிகரித்துள்ளது. இதனால் அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டுகின்றனர்.

பொதுமக்கள் ஆக்கிரமிப்பு என தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். ஆனால் தீர்வுகள் ஏதும் கிடைப்பதில்லை.

சாமன்ய மக்களின் வறுமையை பயன்படுத்தி அரசியல் கட்சியினர் இது போன்ற அரசு நிலங்களில் உள்வாடகைக்கு விடும் சூழலும் இருக்கிறது.இது போன்ற ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us