/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின் அலுவலர் 'சஸ்பெண்ட்' கேங்மேன் பலி எதிரொலி மின் அலுவலர் 'சஸ்பெண்ட்' கேங்மேன் பலி எதிரொலி
மின் அலுவலர் 'சஸ்பெண்ட்' கேங்மேன் பலி எதிரொலி
மின் அலுவலர் 'சஸ்பெண்ட்' கேங்மேன் பலி எதிரொலி
மின் அலுவலர் 'சஸ்பெண்ட்' கேங்மேன் பலி எதிரொலி
ADDED : ஜூலை 30, 2024 11:24 PM
கள்ளிமந்தையம்:துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மருதன் வாழ்வு பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ், 37. திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். ஜூலை 27ல் பாலப்பன்பட்டியில் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது காற்று வீசியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதில் காயமடைந்த சுந்தரராஜ் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார்.
இந்நிலையில் உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள், இச்சம்பவத்திற்கு காரணமான மின்வாரிய உதவி பொறியாளர் இசக்கியை பணி நீக்கம் செய்யவும், சுந்தரராஜன் மனைவிக்கு அரசு வேலை வழங்கக்கோரியும் போராடினர். இதனிடையே பொறியாளர் இசக்கியை சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சுந்தரராஜின் உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.