ADDED : ஜூன் 06, 2024 09:01 PM
கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று காலை முதலே இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
நேற்று காலை 11:00 மணியிலிருந்து பெய்யத் துவங்கிய மழை மாலை 6:00 மணி வரை நீடித்தது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. மழையால் கீழ்மலைப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இவ்விரு மலைப்பகுதிகளிலும் கன மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பயணியர் விடுதிகளில் முடங்கினர்