ADDED : ஜூலை 12, 2024 07:45 AM
பழநி: கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி பழநி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்பட உள்ளது. 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி, கல்வி கண் திறந்த வள்ளல் காமராஜர் ,
9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், கல்வி வளர்ச்சிக்கு காமராஜரின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுத வேண்டும்.
இந்போட்டி அருங்காட்சியகத்தில் ஜூலை 15 காலை 10 :00 மணிக்கு நடக்கஉள்ளது.
இதில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் பள்ளி மூலமாக பெயரை பதிவு செய்ய வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவுக்கும் 10 மாணவர்கள் மட்டும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர் என காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்தார்.