ADDED : மார் 14, 2025 06:07 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இயற்கை ,யோகா மருத்துவப்பிரிவு கட்டடத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலக கண்காணிப்பாளர் அங்கயர்கன்னி முன்னிலை வகித்தார். ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் ,பாலமுருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.