/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளாஸ்டிக் இல்லா திண்டுக்கல்லை உருவாக்கும் சுற்றுச்சூழல் கழகம் பிளாஸ்டிக் இல்லா திண்டுக்கல்லை உருவாக்கும் சுற்றுச்சூழல் கழகம்
பிளாஸ்டிக் இல்லா திண்டுக்கல்லை உருவாக்கும் சுற்றுச்சூழல் கழகம்
பிளாஸ்டிக் இல்லா திண்டுக்கல்லை உருவாக்கும் சுற்றுச்சூழல் கழகம்
பிளாஸ்டிக் இல்லா திண்டுக்கல்லை உருவாக்கும் சுற்றுச்சூழல் கழகம்

குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்
ரவிச்சந்திரன்,சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர்,திண்டுக்கல்: ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தான் இருப்பதிலேயே மிகவும் கொடுமையானது. அதை மக்கள் பயன்படுத்திவிட்டு ரோட்டோரங்களில் விட்டு செல்வதால் அது மண்ணில் புதைந்து மக்காமல் மண் வளத்தை கெடுக்கிறது. இதுதவிர ரோட்டோரங்களில் உணவு தேடியும் திரியும் கால்நடைகள் பசியால் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு உடல்நலம் பாதிக்கப்படுகின்றன. எங்கள் அமைப்பு மூலம் முழுமையாக திண்டுக்கல் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறோம். பொது மக்கள் வீடுகளிலிருந்து கடைகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்து துணி பைகள்,பாத்திரங்களை எடுத்து செல்லுங்கள். குழந்தைகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்க கற்றுகொடுங்கள்.
பொது இடங்களில் விழிப்புணர்வு
அருண்,சுற்றுச்சூழல் கழக உதவி ஒருங்கிணைப்பாளர்,திண்டுக்கல்: பிளாஸ்டிக் பயன்பாடை தடுப்பது எல்லாரும் நினைத்தால் மட்டுமே சாத்தியம். அதற்காக தான் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி,கல்லுாரிகளுக்கு செல்கிறோம். ரயில்வே ஸ்டேஷன்,பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் மஞ்சள் பைகள்,துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கண்டிப்பாக திண்டுக்கல் முழுவதும் வருங்காலத்தில் பிளாஸ்டிக் இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.