ADDED : ஜூலை 25, 2024 06:53 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டத்தை சேர்ந்த திறன்மிகு உதவியாளர் சரவணனுக்கு ஓய்வு பெற்ற செல்லையா காலிப்பணியிடத்தில் பணி உத்தரவு வழங்க வேண்டும்.
தகுதி சாலைப்பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் திருச்சி ரோடு நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் ஜெயபால் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பங்கேற்றனர். டி.என்.ஆர்.ஐ.ஏ.,உட்கோட்ட தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.