ADDED : ஜூலை 10, 2024 02:22 AM

நத்தம்:திண்டுக்கல்மாவட்டம் நத்தம் விவசாயி கணேசன். இவரது மனைவி மணிமாலாவிடம் உறவினர் ஹரிராம் மூலம் அணுகிய கசவனம்பட்டி அர்ஜூன்பாண்டி 33, தன் உறவினர் பழநி முருகன் கோயிலில் உதவியாளராக உள்ளார்.
அவர் மூலம் கோயிலில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய மணிமாலா ரூ.9 லட்சம் கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால் அர்ஜூன் பாண்டியை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப் 'செய்யப்பட்டு இருந்தது. போலீசில் மணிமாலா புகார் அளித்தார். வெள்ளோடு பஸ்ஸ்டாண்ட் அருகே நின்ற அர்ஜூன் பாண்டியை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது ராமநாதபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.