Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 4.66 கோடி வரிப்பணம் கையாடல்; இளநிலை உதவியாளர் கைது

4.66 கோடி வரிப்பணம் கையாடல்; இளநிலை உதவியாளர் கைது

4.66 கோடி வரிப்பணம் கையாடல்; இளநிலை உதவியாளர் கைது

4.66 கோடி வரிப்பணம் கையாடல்; இளநிலை உதவியாளர் கைது

ADDED : ஜூலை 21, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் வரிப்பணம் 4.66 கோடியை கையாடல் செய்த கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளர் சரவணனை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன் 35. திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த இவர், வரி வசூல் பணம் 4.66 கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முறைகேடுகளை கண்காணிக்க தவறியதாக மாநகராட்சி கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதிஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.முறைகேடு குறித்து மாநகராட்சி கமிஷனர் தரப்பில் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக மாநகராட்சியின் தணிக்கை அறிக்கையும் தரப்பட்டது. இதையடுத்து புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டார். அதன்படி நிதி முறைகேடு குறித்து விசாரணை செய்த போலீசார் , சரவணனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us