/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காளியம்மன் கோயில் விழாவில் பிடிமண் காளியம்மன் கோயில் விழாவில் பிடிமண்
காளியம்மன் கோயில் விழாவில் பிடிமண்
காளியம்மன் கோயில் விழாவில் பிடிமண்
காளியம்மன் கோயில் விழாவில் பிடிமண்
ADDED : ஜூன் 29, 2024 04:44 AM

கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் சுவாமி சிலை செய்ய பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் மஞ்சள் ஆடை அணிந்து பக்தி பரவசத்துடன் பிடி மண் எடுத்து வந்து காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். ஜூலை12ல் சுவாமி நகைப்பெட்டியுடன் அம்மன் கரகம் ஜோடி கோயில் வந்தடைதல், ஜூலை 13 ல் மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி நேர்த்திக் கடன்களை செலுத்துவர். மறுநாள் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.