ADDED : ஜூலை 03, 2024 05:55 AM
சாணார்பட்டி : கலைஞர் கனவு இல்ல திட்டம் குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்தது.
திம்மணநல்லுார் ஊராட்சியில் தலைவர் கவிதா தர்மராஜன், கோம்பைப்பட்டி ஊராட்சியில் தலைவர் தமிழரசி கார்த்தியைசாமி, அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சியில் தலைவர் தேவி ராஜா சீனிவாசன், வேம்பார்பட்டி ஊராட்சியில் தலைவர் கந்தசாமி, செங்குறிச்சியில் தலைவர் மணிமாறன், ராஜக்காபட்டியில் தலைவர் பராசக்தி முருகேசன், கணவாய்பட்டி ஊராட்சியில் தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், எமக்கலாபுரம் ஊராட்சியில் தலைவர் சுரேஷ், கம்பிளியம்பட்டி ஊராட்சியில் தலைவர் விஜயா வீராச்சாமி, கூவனுாத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி சத்யராஜ் தலைமையிலும் நடந்தது.
நத்தம்: வேலம்பட்டியில் தலைவர் கண்ணன்,சிறுகுடியில் தலைவர் கோகிலவாணி வீரராகவன், செந்துறையில் தலைவர் சபரி முத்து, குடகிபட்டியில் தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி, சமுத்திராபட்டியில் தலைவர் அமராவதி, பிள்ளையார்நத்தத்தில் தலைவர் தேன்மொழி முருகன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். கவுன்சிலர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். காப்பிலியபட்டியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் சிவபாக்கியம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.