ADDED : ஜூலை 27, 2024 06:31 AM
திண்டுக்கல்: பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் திண்டுக்கல் நாகல்நகர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகராட்சி சேர்மன் கார்த்திக், பகுதி செயலாளர்கள் உதயகுமார், அப்பாஸ் மந்திரி, பரமன், நாகலட்சுமி, செந்தில்,நிர்வாகிகள் அதிபன் அபு,பாரதி,மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் முகமது அலியார் பங்கேற்றனர்.