/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு
எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு
எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு
எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு
ADDED : ஜூன் 22, 2024 06:09 AM

:செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குளம், கண்மாய், வரத்து கால்வாய் மட்டுமின்றி விவசாய நிலங்களிலும் கட்டுப்பாடற்ற மணல், மண் கொள்ளை நடக்கிறது. பரவிவரும் பாதாள குழிகளாலும் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் குளம், குட்டை, ஊருணி என நுாற்றுக்கணக்கான நீர்நிலைகள் உள்ளன. மாவட்ட நிர்வாக பட்டியலின்படி ஒன்றியம் வாரியாக 2539 ,100 ஏக்கருக்கு கூடுதலான பரப்புடன் 107 கண்மாய்கள் பொதுப்பணித்துறை வசமும் உள்ளன. பெரும்பாலான நீராதாரங்களின் நீர்பிடிப்பு வழித்தடம், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு , பராமரிப்பின்றி துார்ந்துள்ளன. பல இடங்களில் ஆவண அடிப்படையில் குடிமராமத்து பணிகள் நடந்துள்ளன. இப்பணியில் ரூ. பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகளும் அரங்கேரி உள்ளன. அரசுத்துறை அமைப்புகளின் அலட்சியத்தால் மழை நீரானது சம்பந்தப்பட்ட நீராதாரங்களுக்கு வந்தடைவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
விவசாய பயன்பாடு என்ற பெயரில் கரிசல் மண் துவங்கி வண்டல் மண், சவுடு மண், செம்மண், கிராவல், மணல் போன்றவற்றை மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் இருந்து முறைகேடாக திருடப்பட்டு வருகிறது. இதற்காக நீர் நிலைகளில் பாதாள குழிகளுடன் சுரங்கம் போன்று தோண்டப்பட்டு உள்ளன. விபத்து அபாயம் மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டத்திலும் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. வருவாய், போலீஸ், கனிமவளத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மண் திருட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-