ADDED : ஜூலை 27, 2024 05:31 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட மண் அள்ளும் இயந்திரம்,துாய்மை பணியாளர்கள் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். திண்டுக்கல் மேற்குரத வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களும் திறக்கப்பட்டது. கலெக்டர் பூங்கொடி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன்,மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா, மாநகர பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.