ADDED : ஜூன் 16, 2025 03:32 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி, 42. கூலித்தொழி-லாளி. நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு மீன் பிடிக்க, கடத்துார் ஏரிக்கு சென்றார்.
காலை வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். இதில், மீன் பிடிக்கும் போது போதையில் தவறி ஏரியில் விழுந்து மூழ்கி முனுசாமி பலியானது தெரியவந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு முனுசாமி உடலை மீட்கப்பட்டு, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.