Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி

பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி

பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி

பைக் -- டிப்பர் லாரி மோதல் மாணவர் உட்பட இருவர் பலி

ADDED : ஜூன் 20, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
அதியமான்கோட்டை:நல்லம்பள்ளி அருகே, பைக் மீது டிப்பர் லாரி மோதி பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம், நாகாலம்மன் கோம்பையைச் சேர்ந்தவர் கார்த்திக், 21; கட்டட மேஸ்திரி. அதே ஊரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வெற்றிவேல், 19. இருவரும், சொந்த வேலையாக நல்லம்பள்ளிக்கு, நாகாலம்மன் கோம்பையில் இருந்து, யமஹா ஆர் 15 பைக்கில், நேற்று காலை 10:00 மணிக்கு -முத்தம்பட்டி சாலை வழியாக சென்றனர்.

பூதனஹள்ளி கிராம எல்லை அருகே, எதிரே மாட்லாம்பட்டியில் இருந்து பொம்மிடி-க்கு 'எம்-சாண்ட்' ஏற்றி வந்த டிப்பர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் வந்த கார்த்திக், வெற்றிவேல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதியமான்கோட்டை போலீசார், இருவரது உடலையும் மீட்டு, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us