Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ADDED : மே 19, 2025 02:31 AM


Google News
ஒகேனக்கல்: வார விடுமுறையை யொட்டி, ஒகேனக்கல்லில் நேற்று, 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 5,000 கன அடியாக இருந்தது. கோடை விடுமுறையால், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் எண்-ணிக்கை நேற்று, 20,000க்கும் மேல் இருந்தது.

இவர்கள், வெயிலின் தாக்கத்தை குறைக்க மசாஜ் செய்து கொண்டு, காவிரியாற்றில், மெயின் பால்ஸ், சினி பால்ஸ் உள்-ளிட்ட அருவிகளில் குளித்தனர். தொடர்ந்து, ஒகேனக்கல் பிர-சித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டனர். மேட்டூர் அணையில், தொடர்ந்து, 100 அடிக்கு, மேல் தண்ணீர் உள்-ளதால், ஒகேனக்கல்லில் நீர் தேக்கமடைந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு, பாறைகளுக்கு இடையே ஆற்றில் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்-தனர். பரிசல்கள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து, மெயின் பால்ஸ், மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us