Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ADDED : ஜூன் 09, 2025 04:01 AM


Google News
ஒகேனக்கல்: ஒகேனக்கல், காவிரியாற்றில் தீயணைப்பு துறை சார்பில், தென்-மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை அருகே நடந்த இந்நிகழ்ச்-சிக்கு, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி தலைமை வகித்தார். தென்-மேற்கு பருவமழையின் போது, ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அப்போது, இடர்பாடு-களில் சிக்கும் மக்களை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது, பென்னாகரம் தாசில் தார் பிரசன்னமூர்த்தி, பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி மற்றும் ஒகேனக்கல் தீயணைப்புத்துறை வீரர்கள், வருவாய் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us