Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஆடி பெருக்கை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடி பெருக்கை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடி பெருக்கை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடி பெருக்கை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ADDED : ஜூலை 31, 2024 07:24 AM


Google News
நல்லம்பள்ளி: ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் வாரச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை முதலே ஆட்டுச்சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்திருந்தனர். வரும் சனிக்கிழமையில், ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த வாரச்சந்தையில் விற்பனைக்காக, 1,000 ஆடுகளுக்கு மேல் கொண்டு வரப்பட்டன. எடையளவை பொறுத்து, 4,000 ரூபாய் -முதல், 30,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. அதன்படி, நேற்றைய ஆட்டுச்சந்தையில், 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us