Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

ADDED : செப் 16, 2025 02:14 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி அடுத்த, சோகத்துார் சவுளுப்பட்டியை சேர்ந்தவர் பிரியா, 25. இவருக்கு கடந்த, 2019ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி, 5 ஆண்டாக குழந்தை இல்லாததால், பிரியா மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த, 13 அன்று இரவு, 7:00 மணிக்கு பிரியா வீட்டின் அருகிலுள்ள கொய்யா மரத்தில், சேலையால் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us