Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ADDED : செப் 16, 2025 02:14 AM


Google News
அரூர் அரூர் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டி கடைகள் மற்றும் தரைக்கடைகளை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தியதால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்துக்கு இடையூறாக வழிப்பாதையை ஆக்கிரமித்து தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுவதாக, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது.

அதை தொடர்ந்து, நகராட்சி கமிஷ்னர் சேகர் (பொறுப்பு) தலைமையில், அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள், நேற்று மதியம், 1:00 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் சிலர், அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us