ADDED : ஜூன் 20, 2024 06:17 AM
பாலக்கோடு: பாலக்கோடு ஸ்துாபி மைதானத்தில் காங்., கட்சியின் சார்பில், அக்கட்சியின் எம்.பி., ராகுலின், பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, நகர தலைவர் கணேசன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சீதாராமன், விவசாய அணி மாவட்ட தலைவர் அன்பழகன், ஏ.ஐ.சி.டி.யு., மாநில தலைவர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் செந்தில், பாலாஜி, குமார் உள்பட, கட்சி நிர்வாகிகள் பலர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.