Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வனத்தில் குவியும் பிளாஸ்டிக் குப்பை

வனத்தில் குவியும் பிளாஸ்டிக் குப்பை

வனத்தில் குவியும் பிளாஸ்டிக் குப்பை

வனத்தில் குவியும் பிளாஸ்டிக் குப்பை

ADDED : ஜூன் 09, 2025 04:00 AM


Google News
அரூர்: அரூரில் இருந்து, கடத் துார் செல்லும் சாலையில், குரங்கு-பள்ளம் அருகே, அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

இங்கு, மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், அருகிலுள்ள வனப்பகு-தியில், மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பின், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்-களை, அப்பகுதியில் குடிமகன்கள் வீசிச்செல்வதால், பிளாஸ்டிக் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பிளாஸ்டிக் குப்பையை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிட்டு, உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us