Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பரவலாக மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

பரவலாக மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

பரவலாக மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

பரவலாக மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : செப் 12, 2025 01:56 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி முதல், மாவட்டத்தில் சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஒகேனக்கல்லில், 52.8 மி.மீ., மழை பதிவானது. இதுதவிர, பாலக்கோடு, 41 மி.மீ., மாரண்டஅள்ளி, 29, பென்னாகரம், 24, பாப்பிரெட்டிப்பட்டி, 17, தர்மபுரி, 15, நல்லம்பள்ளி, 5, மற்றும் அரூரில், 3 மி.மீ., மழை பெய்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us