ADDED : ஜூலை 25, 2024 01:40 AM
தர்மபுரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை, கலெக்டர் சாந்தி தலைமையில் நடக்க உள்ளது.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை வெள்ளிக்கிழமை காலை, 11:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
தர்மபுரி மாவட்-டத்தை சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கருத்து-களை எடுத்துக் கூறி பயனடையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்-துள்ளார்.