Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

ADDED : டிச 01, 2025 02:58 AM


Google News
அரூர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'டிட்வா' புயலால், நேற்று முன்-தினம் முதல், தர்மபுரி மாவட்டம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது.

தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் சாரல்மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் ரெயின்கோட் அணிந்த படி சாரல் மழையில் நனைந்த-படியே சென்றனர். கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளுக்கு பசுந்தீ-வனம் வழங்க முடியாமல், விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர். சாரல்மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us