/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்
தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்
தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்
தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக கொடியேற்றம்
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டபத்திலுள்ள காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஜூன், 12) நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கோ பூஜை மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் வனத்தில் பிளாஸ்டிக் குப்பை
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலுக்கு வரும் சிலர், பாலிதீன் உள்ளிட்ட குப்பையை கொட்டிச் செல்கின்றனர்.
பொருட்களில் கலப்படம் மக்களுக்கு விழிப்புணர்வு
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் பஸ் ஸ்டாண்டில் வணிகர் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், உணவு பாதுகாப்பு நடமாடும் வாகனம் மூலம், உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து, எல்.இ.டி., தொடுதிரை மூலம், உணவு பொருட்கள் கலப்படம் கண்டறிதல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வெண்டைக்காய் விலை சரிவு
அரூர்: அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டார பகுதியில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.