Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரூ.47.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்

ரூ.47.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்

ரூ.47.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்

ரூ.47.50 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்

ADDED : ஜூலை 09, 2024 06:04 AM


Google News
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 174 விவசாயிகள், 445 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,909 முதல், 7,499 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 445 குவிண்டால் பருத்தி, 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 110 விவசாயிகள், 250 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,799 முதல், 7,632 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 250 குவிண்டால் பருத்தி, 17.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us