Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பெட்டிஷன் மேளாவில் 75 மனுக்களுக்கு தீர்வு

பெட்டிஷன் மேளாவில் 75 மனுக்களுக்கு தீர்வு

பெட்டிஷன் மேளாவில் 75 மனுக்களுக்கு தீர்வு

பெட்டிஷன் மேளாவில் 75 மனுக்களுக்கு தீர்வு

ADDED : ஜூன் 12, 2025 01:50 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி, எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், 75 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் தீர்வு காணப்படாத பல்வேறு வழக்குகளில் சுமூகமாக தீர்வு காணும் வகையிலும், புதிய புகார்களை விரைந்து முடிக்கும் வகையிலும், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று, பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறும் வகையில், பெட்டிஷன் மேளா எனும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.

காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடந்த முகாமில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களின் மனுக்களை, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ,.,க்கள் விசாரித்தனர். முகாமில், 75 மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. நேற்று புதிதாக வழங்கப்பட்ட, 29 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும் என, போலீசார்தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us