Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

ADDED : மே 24, 2025 07:04 AM


Google News
பெண்ணாடம் பெண்ணாடம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பெண்ணாடம் அடுத்த முருகன்குடி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் தமிழ்வேந்தன் மகன் விக்னேஷ், 33. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாதேவி என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மகன், மகள் உள்ளனர்.

விக்னேசுக்கு குடிப் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவரது தாய் பார்வதி அளித்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us