ADDED : மே 24, 2025 07:04 AM
குள்ளஞ்சாவடி : கார் மோதியதில் மொபட்டில் சென்ற முதியவர் இறந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், நடுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,69; அதே பகுதி, தெற்கு தெருவை சேர்ந்தவர் மாயவன், 60; நேற்று முன்தினம் வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றுவதற்காக இருவரும் மொபெட்டில் கடலுார்-விருத்தாசலம் மெயின் ரோட்டில் சென்றனர்.
ஆயிக்குப்பம் சந்திப்பு அருகே வந்த போது, எதிரில் வந்த கார் திடீரென மொபட் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மாயவன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.