ADDED : அக் 24, 2025 03:17 AM
குறிஞ்சிப்பாடி: மூதாட்டி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது
குறிஞ்சிப்பாடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பானுமதி, 72; தனது மகன் வீட்டில் கணவருடன் வசித்து வந்த பானுமதி, நேற்று முன்தினம் காலை கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்பு அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
மனைவி மாயமானது குறித்து ராமலிங்கம் கொடுத் துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


