ADDED : அக் 24, 2025 03:18 AM
நெய்வேலி: விபத்தில் இறந்த மூதாட்டி யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ் வடகுத்து பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 16ம் தேதி சாலை விபத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார். இறந்தவர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.
இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


