Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ADDED : ஜூன் 14, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் : விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

நேற்று முன்தினம் ஏழாம் நாள் உற்சவமாக திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி உற்சவர்கள் எழுந்தருளியதும், மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இன்று (14ம் தேதி) காலை 8:00 மணிக்கு தேரோட்டம், நாளை 15ம் தேதி புஷ்ப யாகம், இரவு பல்லக்கு புறப்பாடு, 16ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us