ADDED : மே 12, 2025 12:22 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண மன்ற கூட்டம் நடந்தது.
சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் முகமது யூனுஸ், செயல் அலுவலர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
துப்பரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தம் நன்றி கூறினார்.