Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

ADDED : மார் 22, 2025 08:56 PM


Google News
Latest Tamil News
கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கல்லுாரியில் ஆண்டு விழா, நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் நாராயணசாமி, உடற்கல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

நுண்கலை மன்றத்தின் ஆண்டறிக்கையை, கணித துறை இணை பேராசிரியர் சுடர்விழி வாசித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக, சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில், புவனகிரி ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

பொருளியல்துறை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us