/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்விரோதத்தில் கத்தி வெட்டு :மூவர் கைது முன்விரோதத்தில் கத்தி வெட்டு :மூவர் கைது
முன்விரோதத்தில் கத்தி வெட்டு :மூவர் கைது
முன்விரோதத்தில் கத்தி வெட்டு :மூவர் கைது
முன்விரோதத்தில் கத்தி வெட்டு :மூவர் கைது
ADDED : ஜூலை 02, 2025 11:48 PM
விருத்தாசலம் : முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டி, மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த களர்குப்பம் ஞானசேகர் மகன் வீரசேகர், 22, ரங்கநாதன் மகன் வல்லரசு. இருவக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், கடந்த 29ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வல்லரசு ஆதரவாளர்கள் கத்தியால் வீரசேகரை தலையில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதில், படு காயமடைந்த வீரசேகர், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது புகாரின் பேரில், ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, ரங்கநாதன் மகன்கள் வல்லரசு, 24, ரகுராஜ், 40, ரமேஷ் மகன் கணேசமூர்த்தி, 21, ஆகியோரை கைது செய்தனர்.